குறள்: 741ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்போற்று பவர்க்கும் பொருள்.

A fort is wealth to those who act against their foes;Is wealth to them who, fearing, guard themselves from woes

மு.வரதராசன் உரை

(படையெடுத்தும்) போர் செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும், (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னை புகழிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா உரை

பிறர்மேல் படை எடுத்துச் செல்பவர்க்கும் சிறந்தது அரண்; பிறருக்குப் பயந்து உள்ளிருப்பவர்க்கும் அதுவே சிறந்தது.

கலைஞர் உரை

பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்

Explanation

A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter

Kural Info

குறள் எண்:741
Category:பொருட்பால்
அதிகாரம்:அரண்
இயல்:அரணியல்