குறள்: 749முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறெய்தி மாண்ட தரண்.

At outset of the strife a fort should foes dismay;And greatness gain by deeds in every glorious day

மு.வரதராசன் உரை

போர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை

போர் தொடங்கிய உடனே பகைவர் அழியும்படி உள்ளிருப்போர் செய்யும் போர்த்திறத்தால் சிறந்த விளங்குவதே அரண்.

கலைஞர் உரை

போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்nயிருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும்

Explanation

A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield

Kural Info

குறள் எண்:749
Category:பொருட்பால்
அதிகாரம்:அரண்
இயல்:அரணியல்