குறள்: 750எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்லது அரண்.

Howe'er majestic castled walls may rise,To craven souls no fortress strength supplies

மு.வரதராசன் உரை

எத்தகைய பெருமையை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரரிடத்தில் அரண் பயனில்லாததாகும். பொருள் செயல்வகை

சாலமன் பாப்பையா உரை

எத்தனை சிறப்புகளை உடையது என்றாலும் வெல்லும் பகை அறிந்து செயல்படும் திறம் இல்லாதவர் இருந்தால், அரண் இருந்தும் இல்லாததே ஆகும்.

கலைஞர் உரை

கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது

Explanation

Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action

Kural Info

குறள் எண்:750
Category:பொருட்பால்
அதிகாரம்:அரண்
இயல்:அரணியல்