குறள்: 422சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇநன்றின்பால் உய்ப்ப தறிவு.
Wisdom restrains, nor suffers mind to wander where it would;From every evil calls it back, and guides in way of good
மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்
Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom
| குறள் எண்: | 422 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | அறிவுடைமை |
| இயல்: | அரசியல் |