குறள்: 426எவ்வ துறைவது உலகம் உலகத்தோடுஅவ்வ துறைவ தறிவு.

As dwells the world, so with the world to dwellIn harmony- this is to wisely live and well

மு.வரதராசன் உரை

உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.

சாலமன் பாப்பையா உரை

உலகத்துப் பெரியோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவரோடு சேர்ந்து, தானும் அப்படியே வாழ்வது அறிவு.

கலைஞர் உரை

உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்

Explanation

To live as the world lives, is wisdom

Kural Info

குறள் எண்:426
Category:பொருட்பால்
அதிகாரம்:அறிவுடைமை
இயல்:அரசியல்