குறள்: 427அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்.

The wise discern, the foolish fail to see,And minds prepare for things about to be

மு.வரதராசன் உரை

அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர்.

சாலமன் பாப்பையா உரை

அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

கலைஞர் உரை

ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்

Explanation

The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise

Kural Info

குறள் எண்:427
Category:பொருட்பால்
அதிகாரம்:அறிவுடைமை
இயல்:அரசியல்