குறள்: 428அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில்.

Folly meets fearful ills with fearless heart;To fear where cause of fear exists is wisdom's part

மு.வரதராசன் உரை

அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

சாலமன் பாப்பையா உரை

பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்படுவது அறிவாளிகளின் செயல்.

கலைஞர் உரை

அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்

Explanation

Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared

Kural Info

குறள் எண்:428
Category:பொருட்பால்
அதிகாரம்:அறிவுடைமை
இயல்:அரசியல்