குறள்: 725ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சாமாற்றங் கொடுத்தற் பொருட்டு.

By rule, to dialectic art your mind apply,That in the council fearless you may make an apt reply

மு.வரதராசன் உரை

அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.

கலைஞர் உரை

அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்

Explanation

In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar)

Kural Info

குறள் எண்:725
Category:பொருட்பால்
அதிகாரம்:அவை அஞ்சாமை
இயல்:அமைச்சியல்