குறள்: 728பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்நன்கு செலச்சொல்லா தார்.

Though many things they've learned, yet useless are they all,To man who cannot well and strongly speak in council hall

மு.வரதராசன் உரை

நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே.

சாலமன் பாப்பையா உரை

நல்லனவற்றை நல்லவர் கூடிய அவையில் அவர் மனங் கொள்ளச் சொல்லத் தெரியாதவர், பலதுறை நூல்களைக் கற்றிருந்தாலும் உலகிற்குப் பயன்படாதவரே.

கலைஞர் உரை

அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை

Explanation

Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements

Kural Info

குறள் எண்:728
Category:பொருட்பால்
அதிகாரம்:அவை அஞ்சாமை
இயல்:அமைச்சியல்