குறள்: 730உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்கற்ற செலச்சொல்லா தார்.
Who what they've learned, in penetrating words know not to say,The council fearing, though they live, as dead are they
அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.
அவையைப் பார்த்துப் பயந்து, படித்தவற்றை அவைக்கு ஏற்பச் சொல்லத் தெரியாதவர், வாழ்ந்தாலும் வாழாதவர்க்குச் சமமே.
தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்
Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead
| குறள் எண்: | 730 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | அவை அஞ்சாமை |
| இயல்: | அமைச்சியல் |