குறள்: 717கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொல்தெரிதல் வல்லார் அகத்து.

The learning of the learned sage shines brightTo those whose faultless skill can value it aright

மு.வரதராசன் உரை

குற்றமறச்சொற்களை ஆராயவதில் வ ல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.

சாலமன் பாப்பையா உரை

சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல் படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின் சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திறம் அனைவருக்கும் விளங்கும்.

கலைஞர் உரை

மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்

Explanation

The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) words

Kural Info

குறள் எண்:717
Category:பொருட்பால்
அதிகாரம்:அவை அறிதல்
இயல்:அமைச்சியல்