குறள்: 719புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்நன்குசலச் சொல்லு வார்.

In councils of the good, who speak good things with penetrating power,In councils of the mean, let them say nought, e'en in oblivious hour

மு.வரதராசன் உரை

நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைப் மனதில் பதியுமாறு சொல்லவல்லவர், அறிவில்லாதவரின் கூட்டத்தில் மறந்தும் பேசக் கூடாது.

சாலமன் பாப்பையா உரை

நல்லவர் கூடி இருந்த அவையில் நல்ல பொருள்களைக் கேட்பவர் மனம் ஏற்கப் பேசும் திறம் படைத்த பேச்சாளர், அவற்றை ஏற்கும் திறம் அற்ற சிறியோர் கூடி இருக்கும் அவையில் மறந்தும் பேச வேண்டா.

கலைஞர் உரை

நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்

Explanation

Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the low

Kural Info

குறள் எண்:719
Category:பொருட்பால்
அதிகாரம்:அவை அறிதல்
இயல்:அமைச்சியல்