குறள்: 382அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

Courage, a liberal hand, wisdom, and energy: these fourAre qualities a king adorn for evermore

மு.வரதராசன் உரை

அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.

சாலமன் பாப்பையா உரை

அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.

கலைஞர் உரை

துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்

Explanation

Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly character

Kural Info

குறள் எண்:382
Category:பொருட்பால்
அதிகாரம்:இறைமாட்சி
இயல்:அரசியல்