குறள்: 384அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்காமானம் உடைய தரசு.
Kingship, in virtue failing not, all vice restrains,In courage failing not, it honour's grace maintains
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.
தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு.
அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்
He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice
| குறள் எண்: | 384 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | இறைமாட்சி |
| இயல்: | அரசியல் |