குறள்: 1061கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும்.

Ten million-fold 'tis greater gain, asking no alms to live,Even from those, like eyes in worth, who nought concealing gladly give

மு.வரதராசன் உரை

உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறர்க்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்கா திருப்பது கோடி நன்மையாகும்.

கலைஞர் உரை

இருப்பதை ஒளிக்காமல் வழங்கிடும் இரக்கச்சிந்தையுடைவரிடம்கூட, இரவாமல் இருப்பது கோடி மடங்கு உயர்வுடையதாகும்

Explanation

Not to beg (at all) even from those excellent persons who cheerfully give without refusing, will do immense good

Kural Info

குறள் எண்:1061
Category:பொருட்பால்
அதிகாரம்:இரவச்சம்
இயல்:குடியியல்