குறள்: 1062இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான்.

If he that shaped the world desires that men should begging go,Through life's long course, let him a wanderer be and perish so

மு.வரதராசன் உரை

உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.

சாலமன் பாப்பையா உரை

பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.

கலைஞர் உரை

பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்

Explanation

If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish

Kural Info

குறள் எண்:1062
Category:பொருட்பால்
அதிகாரம்:இரவச்சம்
இயல்:குடியியல்