குறள்: 1064இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்காலும் இரவொல்லாச் சால்பு.
Who ne'er consent to beg in utmost need, their worthHas excellence of greatness that transcends the earth
வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.
ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.
வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது
Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution
| குறள் எண்: | 1064 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | இரவச்சம் |
| இயல்: | குடியியல் |