குறள்: 1064இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்காலும் இரவொல்லாச் சால்பு.

Who ne'er consent to beg in utmost need, their worthHas excellence of greatness that transcends the earth

மு.வரதராசன் உரை

வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஏதும் இல்லாமல் வறுமை உற்றபோதும் பிறரிடம் சென்று பிச்சை கேட்கச் சம்மதியாத மன அடக்கம், எல்லா உலகும் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையை உடையது.

கலைஞர் உரை

வாழ்வதற்கு ஒரு வழியும் கிடைக்காத நிலையிலும் பிறரிடம் கையேந்திட நினைக்காத பண்புக்கு, இந்த வையகமே ஈடாகாது

Explanation

Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution

Kural Info

குறள் எண்:1064
Category:பொருட்பால்
அதிகாரம்:இரவச்சம்
இயல்:குடியியல்