குறள்: 1065தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்ததுஉண்ணலின் ஊங்கினிய தில்.

Nothing is sweeter than to taste the toil-won cheer,Though mess of pottage as tasteless as the water clear

மு.வரதராசன் உரை

தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.

கலைஞர் உரை

கூழ்தான் குடிக்கவேண்டிய நிலை என்றாலும், அதையும் தானே உழைத்துச் சம்பாதித்துக் குடித்தால் அதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை

Explanation

Even thin gruel is ambrosia to him who has obtained it by labour

Kural Info

குறள் எண்:1065
Category:பொருட்பால்
அதிகாரம்:இரவச்சம்
இயல்:குடியியல்