குறள்: 1066ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்குஇரவின் இளிவந்த தில்.

E'en if a draught of water for a cow you ask,Nought's so distasteful to the tongue as beggar's task

மு.வரதராசன் உரை

பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

சாலமன் பாப்பையா உரை

பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம் பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக் கேவலம் வேறு இல்லை.

கலைஞர் உரை

தாகம் கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை

Explanation

There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow

Kural Info

குறள் எண்:1066
Category:பொருட்பால்
அதிகாரம்:இரவச்சம்
இயல்:குடியியல்