குறள்: 1053கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்றுஇரப்புமோ ரேஎர் உடைத்து.

The men who nought deny, but know what's due, before their faceTo stand as suppliants affords especial grace

மு.வரதராசன் உரை

ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

ஒளிவு மறைவு இல்லாத மனம் உடையவராய், இது என்கடமை என்று அறிபவர் முன்னே நின்று, ஒன்றை அவரிடம் கேட்பதும் கேட்பவர்க்கு அழகுதான்.

கலைஞர் உரை

உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது வறுமை காரணமாக இரந்து கேட்பதும் பெருமையுடையதே யாகும்

Explanation

There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars)

Kural Info

குறள் எண்:1053
Category:பொருட்பால்
அதிகாரம்:இரவு
இயல்:குடியியல்