குறள்: 1055கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்றுஇரப்பவர் மேற்கொள் வது.

Because on earth the men exist, who never say them nay,Men bear to stand before their eyes for help to pray

மு.வரதராசன் உரை

ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.

சாலமன் பாப்பையா உரை

கண் எதிரே நின்று, வறுமைப்பட்டவர் வாயால் கேட்காமல் கண்ணால் கேட்கத் தொடங்குவது, ஒளிவுமறைவு இல்லாமல் அவருக்குக் கொடுப்பவர் இவ்வுலகத்தில் இருப்பதால்தான்.

கலைஞர் உரை

உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்

Explanation

As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them

Kural Info

குறள் எண்:1055
Category:பொருட்பால்
அதிகாரம்:இரவு
இயல்:குடியியல்