குறள்: 493ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின்.

E'en weak ones mightily prevail, if place of strong defence,They find, protect themselves, and work their foes offence

மு.வரதராசன் உரை

தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்,

சாலமன் பாப்பையா உரை

பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

கலைஞர் உரை

தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்

Explanation

Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies

Kural Info

குறள் எண்:493
Category:பொருட்பால்
அதிகாரம்:இடனறிதல்
இயல்:அரசியல்