குறள்: 495நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்நீங்கின் அதனைப் பிற.

The crocodile prevails in its own flow of water wide,If this it leaves, 'tis slain by anything beside

மு.வரதராசன் உரை

ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும், ஆனால் நீரிலிருந்து விலகிவந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்றுவிடும்.

சாலமன் பாப்பையா உரை

முதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்.

கலைஞர் உரை

தண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்

Explanation

In deep water, a crocodile will conquer (all other animals); but if it leave the water, other animals will conquer it

Kural Info

குறள் எண்:495
Category:பொருட்பால்
அதிகாரம்:இடனறிதல்
இயல்:அரசியல்