குறள்: 498சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும்.

If lord of army vast the safe retreat assailOf him whose host is small, his mightiest efforts fail

மு.வரதராசன் உரை

சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.

சாலமன் பாப்பையா உரை

பெரிய படையை உடையவன், சிறிய படையை உடையவன் ஓடி இருக்கும் இடந்தேடிப் போனால், போனவனின் பெருமை அழியும்.

கலைஞர் உரை

சிறிய படை என்றாலும் அது தனக்குரிய இடத்தில் இருந்து போரிட்டால் பெரிய படையை வென்று விட முடியும்

Explanation

The power of one who has a large army will perish, if he goes into ground where only a small army can act

Kural Info

குறள் எண்:498
Category:பொருட்பால்
அதிகாரம்:இடனறிதல்
இயல்:அரசியல்