குறள்: 621இடுக்கண் வருங்கால் நகுக அதனைஅடுத்தூர்வது அஃதொப்ப தில்.
Smile, with patient, hopeful heart, in troublous hour;Meet and so vanquish grief; nothing hath equal power
துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.
நாம் அறியாமலே நமக்கு ஒரு துன்பம் வந்தால் அப்போது மனம் தளராமல் மனத்துள் மகிழ்க; அந்தத் துன்பத்தைத் தோற்கடிக்க அம்மகிழ்ச்சியைப் போல் ஆற்றல் மிக்கது வேறொன்றும் இல்லை.
சோதனைகளை எதிர்த்து வெல்லக் கூடியது, அந்தச் சோதனைகளைக் கண்டு கலங்காமல் மகிழ்வுடன் இருக்கும் மனம்தான்
If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow
| குறள் எண்: | 621 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | இடுக்கண் அழியாமை |
| இயல்: | அரசியல் |