குறள்: 924நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

Shame, goodly maid, will turn her back for aye on themWho sin the drunkard's grievous sin, that all condemn

மு.வரதராசன் உரை

நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.

சாலமன் பாப்பையா உரை

போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.

கலைஞர் உரை

மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்

Explanation

The fair maid of modesty will turn her back on those who are guilty of the great and abominable crime of drunkenness

Kural Info

குறள் எண்:924
Category:பொருட்பால்
அதிகாரம்:கள்ளுண்ணாமை
இயல்:நட்பியல்