குறள்: 571கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகு.

Since true benignity, that grace exceeding great, residesIn kingly souls, world in happy state abides

மு.வரதராசன் உரை

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை

முகம் பார்த்தல் என்னும் பேரழகு மனிதருள் இருப்பதால்தான் மக்கள் வாழ்க்கை தொடர்கின்றது.

கலைஞர் உரை

இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது

Explanation

The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour

Kural Info

குறள் எண்:571
Category:பொருட்பால்
அதிகாரம்:கண்ணோட்டம்
இயல்:அரசியல்