குறள்: 575கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்புண்ணென்று உணரப் படும்
Benignity is eyes' adorning grace;Without it eyes are wounds disfiguring face
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.
ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும் இல்லையானால் அது கண் அல்ல; புண்
Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores
| குறள் எண்: | 575 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | கண்ணோட்டம் |
| இயல்: | அரசியல் |