குறள்: 577கண்ணோட் டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்கண்ணோட்டம் இன்மையும் இல்.

Eyeless are they whose eyes with no benignant lustre shine;Who've eyes can never lack the light of grace benign

மு.வரதராசன் உரை

கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.

கலைஞர் உரை

கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்

Explanation

Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks

Kural Info

குறள் எண்:577
Category:பொருட்பால்
அதிகாரம்:கண்ணோட்டம்
இயல்:அரசியல்