குறள்: 578கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்குஉரிமை உடைத்திவ் வுலகு.
Who can benignant smile, yet leave no work undone;By them as very own may all the earth be won
தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.
தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.
கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்
The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice)
| குறள் எண்: | 578 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | கண்ணோட்டம் |
| இயல்: | அரசியல் |