குறள்: 579ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை.

To smile on those that vex, with kindly face,Enduring long, is most excelling grace

மு.வரதராசன் உரை

தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

சாலமன் பாப்பையா உரை

தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.

கலைஞர் உரை

அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்

Explanation

Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions

Kural Info

குறள் எண்:579
Category:பொருட்பால்
அதிகாரம்:கண்ணோட்டம்
இயல்:அரசியல்