குறள்: 1024சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.

Who labours for his race with unremitting pain,Without a thought spontaneously, his end will gain

மு.வரதராசன் உரை

தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

சாலமன் பாப்பையா உரை

தன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.

கலைஞர் உரை

தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்

Explanation

Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed

Kural Info

குறள் எண்:1024
Category:பொருட்பால்
அதிகாரம்:குடிசெயல் வகை
இயல்:குடியியல்