குறள்: 1015பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்குஉறைபதி என்னும் உலகு.

As home of virtuous shame by all the world the men are known,Who feel ashamed for others, guilt as for their own

மு.வரதராசன் உரை

பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.

சாலமன் பாப்பையா உரை

தமக்கு வரும் பழிக்கு மட்டும் அன்றி, பிறர்க்கு வரும் பழிக்கும் வெட்கப்படுவோர், நாணம் வாழும் இடம் என்று உலகத்தவர் கூறுவர்.

கலைஞர் உரை

தமக்கு வரும் பழிக்காக மட்டுமின்றிப் பிறர்க்கு வரும் பழிக்காகவும் வருந்தி நாணுகின்றவர், நாணம் எனும் பண்பிற்கான உறைவிடமாவார்

Explanation

The world regards as the abode of modesty him who fear his own and other's guilt

Kural Info

குறள் எண்:1015
Category:பொருட்பால்
அதிகாரம்:நாணுடைமை
இயல்:குடியியல்