குறள்: 1016நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்பேணலர் மேலா யவர்.

Unless the hedge of shame inviolate remain,For men of lofty soul the earth's vast realms no charms retain

மு.வரதராசன் உரை

நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

பெரியவர்கள் தனக்குப் பாதுகாப்பாக நாணத்தைக் கொள்வாரே அல்லாமல், இந்தப் பெரிய உலகத்தைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

கலைஞர் உரை

பரந்த இந்த உலகில் பாதுகாப்பையும்விட, நாணம் எனும் வேலியைத்தான் உயர்ந்த மனிதர்கள், தங்களின் பாதுகாப்பாகக் கொள்வார்கள்

Explanation

The great make modesty their barrier (of defence) and not the wide world

Kural Info

குறள் எண்:1016
Category:பொருட்பால்
அதிகாரம்:நாணுடைமை
இயல்:குடியியல்