குறள்: 1017நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாணாள் பவர்.

The men of modest soul for shame would life an offering make,But ne'er abandon virtuous shame for life's dear sake

மு.வரதராசன் உரை

நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்‌.

கலைஞர் உரை

நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்

Explanation

The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life

Kural Info

குறள் எண்:1017
Category:பொருட்பால்
அதிகாரம்:நாணுடைமை
இயல்:குடியியல்