குறள்: 866காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்பேணாமை பேணப் படும்.

Blind in his rage, his lustful passions rage and swell;If such a man mislikes you, like it well

மு.வரதராசன் உரை

ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

சாலமன் பாப்பையா உரை

நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம் எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின் பகைமை, பிறரால் விரும்ப்படும்.

கலைஞர் உரை

சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்

Explanation

Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure

Kural Info

குறள் எண்:866
Category:பொருட்பால்
அதிகாரம்:பகை மாட்சி
இயல்:நட்பியல்