குறள்: 869செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலாஅஞ்சும் பகைவர்ப் பெறின்.

The joy of victory is never far removed from thoseWho've luck to meet with ignorant and timid foes

மு.வரதராசன் உரை

அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.

சாலமன் பாப்பையா உரை

நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா.

கலைஞர் உரை

அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்

Explanation

There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid

Kural Info

குறள் எண்:869
Category:பொருட்பால்
அதிகாரம்:பகை மாட்சி
இயல்:நட்பியல்