குறள்: 1000ண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்கலந்தீமை யால்திரிந் தற்று.

Like sweet milk soured because in filthy vessel poured,Is ample wealth in churlish man's unopened coffers stored

மு.வரதராசன் உரை

பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை

நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.

கலைஞர் உரை

பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்

Explanation

The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the

Kural Info

குறள் எண்:1000
Category:பொருட்பால்
அதிகாரம்:பண்புடைமை
இயல்:குடியியல்