குறள்: 997அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்மக்கட்பண்பு இல்லா தவர்.
Though sharp their wit as file, as blocks they must remain,Whose souls are void of 'courtesy humane'
மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.
மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.
அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்
He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file
| குறள் எண்: | 997 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | பண்புடைமை |
| இயல்: | குடியியல் |