குறள்: 536இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமைவாயின் அதுவொப்பது இல்.
Towards all unswerving, ever watchfulness of soul retain,Where this is found there is no greater gain
யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காதத் தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.
எவரிடத்திலேனும் எப்போதும் விடாமல் மறதி இல்லாத குணம் மட்டும் இருக்கும் என்றால், அதைப் போன்ற நன்மை வேறு இல்லை.
ஒருவரிடம், மறவாமை என்னும் பண்பு தவறாமல் பொருந்தியிருக்குமேயானால், அதைவிட அவருக்கு நன்மை தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது
There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; and towards all persons
| குறள் எண்: | 536 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | பொச்சாவாமை |
| இயல்: | அரசியல் |