குறள்: 540உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்உள்ளியது உள்ளப் பெறின்.

'Tis easy what thou hast in mind to gain,If what thou hast in mind thy mind retain

மு.வரதராசன் உரை

ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.

சாலமன் பாப்பையா உரை

நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க முடியுமானால் நினைத்ததை நினைத்தபடியே அடைவது எளிது.

கலைஞர் உரை

கொண்ட குறிக்கோளில் ஊக்கத்துடன் இருந்து அதில் வெற்றி காண்பதிலேயே நாட்டமுடையவர்களுக்கு அந்தக் குறிக்கோளை அடைவது எளிதானதாகும்

Explanation

It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it

Kural Info

குறள் எண்:540
Category:பொருட்பால்
அதிகாரம்:பொச்சாவாமை
இயல்:அரசியல்