குறள்: 755அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்புல்லார் புரள விடல்.

Wealth gained by loss of love and grace,Let man cast off from his embrace

மு.வரதராசன் உரை

அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக

கலைஞர் உரை

பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்

Explanation

(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love

Kural Info

குறள் எண்:755
Category:பொருட்பால்
அதிகாரம்:பொருள் செயல்வகை
இயல்:கூழியல்