குறள்: 981கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

All goodly things are duties to the men, they sayWho set themselves to walk in virtue's perfect way

மு.வரதராசன் உரை

கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை

நாம் செய்யத்தக்க கடமை இது என்று சான்றாண்மையை மேற்கொண்டு வாழ்பவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் இயல்பாக இருக்கும் என்று கூறுவர்.

கலைஞர் உரை

ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும்

Explanation

It is said that those who are conscious of their duty and behave with a perfect goodness will regard as natural all that is good

Kural Info

குறள் எண்:981
Category:பொருட்பால்
அதிகாரம்:சான்றாண்மை
இயல்:குடியியல்