குறள்: 984கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு.

The type of 'penitence' is virtuous good that nothing slays;To speak no ill of other men is perfect virtue's praise

மு.வரதராசன் உரை

தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

சாலமன் பாப்பையா உரை

பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.

கலைஞர் உரை

உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு

Explanation

Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults

Kural Info

குறள் எண்:984
Category:பொருட்பால்
அதிகாரம்:சான்றாண்மை
இயல்:குடியியல்