குறள்: 988இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்திண்மை உண் டாகப் பெறின்.
To soul with perfect virtue's strength endued,Brings no disgrace the lack of every earthly good
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.
சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல
Poverty is no disgrace to one who abounds in good qualities
| குறள் எண்: | 988 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | சான்றாண்மை |
| இயல்: | குடியியல் |