குறள்: 988இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்திண்மை உண் டாகப் பெறின்.

To soul with perfect virtue's strength endued,Brings no disgrace the lack of every earthly good

மு.வரதராசன் உரை

சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

சாலமன் பாப்பையா உரை

சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.

கலைஞர் உரை

சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல

Explanation

Poverty is no disgrace to one who abounds in good qualities

Kural Info

குறள் எண்:988
Category:பொருட்பால்
அதிகாரம்:சான்றாண்மை
இயல்:குடியியல்