குறள்: 990சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்தாங்காது மன்னோ பொறை.

The mighty earth its burthen to sustain must cease,If perfect virtue of the perfect men decrease

மு.வரதராசன் உரை

சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.

சாலமன் பாப்பையா உரை

சான்றோர் தம் சான்றாண்மைப் பண்பிலிருந்து விலகிக் குறைவுபடுவார் என்றால், இப்பூவுலகம் தன் பாரம் தாங்காமல் அழியும்.

கலைஞர் உரை

சான்றோரின் நற்பண்பே குறையத்தொடங்கினால் அதனை இந்த உலகம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளாது

Explanation

If there is a defect in the character of the perfect, (even) the great world cannot bear (its) burden

Kural Info

குறள் எண்:990
Category:பொருட்பால்
அதிகாரம்:சான்றாண்மை
இயல்:குடியியல்