குறள்: 463ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினைஊக்கார் அறிவுடை யார்.

To risk one's all and lose, aiming at added gain,Is rash affair, from which the wise abstain

மு.வரதராசன் உரை

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.

கலைஞர் உரை

பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்

Explanation

Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal

Kural Info

குறள் எண்:463
Category:பொருட்பால்
அதிகாரம்:தெரிந்து செயல்வகை
இயல்:அரசியல்