குறள்: 465வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதோ ராறு.

With plans not well matured to rise against your foe,Is way to plant him out where he is sure to grow

மு.வரதராசன் உரை

செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.

சாலமன் பாப்பையா உரை

முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.

கலைஞர் உரை

முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்

Explanation

One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances)

Kural Info

குறள் எண்:465
Category:பொருட்பால்
அதிகாரம்:தெரிந்து செயல்வகை
இயல்:அரசியல்