குறள்: 1037தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும்.

Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight;Without one handful of manure, Abundant crops you thus secure

மு.வரதராசன் உரை

ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.

சாலமன் பாப்பையா உரை

உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.

கலைஞர் உரை

ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்

Explanation

If the land is dried so as to reduce one ounce of earth to a quarter, it will grow plentifully even without a handful of manure

Kural Info

குறள் எண்:1037
Category:பொருட்பால்
அதிகாரம்:உழவு
இயல்:குடியியல்