குறள்: 916தந்நலம் பாரப்பார் தோயார் தகைசெருக்கிப்புன்னலம் பாரிப்பார் தோள்.
From touch of those who worthless charms, with wanton arts, display,The men who would their own true good maintain will turn away
அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.
தம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்.
புகழ்ச்சிக்குரிய சான்றோர் எவரும், இகழ்ச்சிக்குரிய இன்பவல்லிகளின் தோளில் சாய்ந்து கிடக்க மாட்டார்
Those who would spread (the fame of) their own goodness will not desire the shoulders of those,who rejoice in their accomplishments and bestow their despicable favours (on all who pay)
| குறள் எண்: | 916 |
|---|---|
| Category: | பொருட்பால் |
| அதிகாரம்: | வரைவின் மகளிர் |
| இயல்: | நட்பியல் |